சென்னை:-
ஊரடங்கு நேரத்தில் தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அவ்வகையில் நடிகை சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரோ பேக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சாயிஷா செகல். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை சாயிஷா தற்போது தமிழில் ஆர்யாவுடன் ‘டெடி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலான நடிகைகள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.
அந்த த்ரோ பேக் புகைப்படத்தில் நடிகை சாயிஷா நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு நடிகை சாயிஷா நான் தண்ணீரை மிஸ் செய்கிறேன் எனவும் கேப்ஷன் செய்துள்ளார்.
நடிகை சாயிஷாவின் பிகினி உடை கவர்ச்சி புகைப்படமானது சமூகவலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.