இன்று ஒரே நாளில் நடிகர் சத்யராஜ், இசையமைப்பாளர் தமன் ஆகியோரைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அருண் விஜய், இயக்குநர் டி.பி.கஜேந்திரன், நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை இசையமைப்பாளர் தமன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சற்று நேரத்திற்கு முன்பு நடிகர் சத்யராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த அதிர்ச்சியில் இருந்து திரையுலக ரசிகர்கள் மீள்வதற்குள் நடிகை த்ரிஷா பேரதிர்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இருந்தப்போதிலும் புத்தாண்டுக்கு சில நாட்களுக்கு முன்பு எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு லேசான அறிகுறி தென்பட்டது. இதையடுத்து செய்துக்கொண்ட பரிசோதனையில் கொரானா இருப்பது உறுதியானது. அதனால் இது வேதனையாக வாரங்களில் ஒன்றாக இருந்தது.
தற்போது பூரண குணமடைந்து நலம் பெற்றுள்ளேன். நான் மீண்டும் செய்துக்கொண்ட பரிசோதனை தொற்று நீங்கியுள்ளது. அனைவரும் முக கவசம் அணியும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.