தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டு உள்ளது. அதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணிகளை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் நாகர்கோயிலில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை அவர் சந்தித்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.