சினிமா

ஒரு வழியாக தொடங்கியது ‘மாநாடு’ படப்பிடிப்பு.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு சென்னையில் தொடங்கியது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக ஒப்பந்தமான படம் ‘மாநாடு’ .

இத்திரைப்படத்தில் ஏற்பட்ட ஏகப்பட்ட சிக்கல்களுக்கு சமீபத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டது. அதனால், ஒருவழியாக தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.

ALSO READ  சிம்புவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!

இதில் பல்வேறு திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சென்னையில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு, அடுத்தகட்டமாக ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

படத்தை 3 ஷெட்டியூல்களாக திட்டமிடப்பட்டு, படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தப் படத்தில் ‘அப்துல் காலிக்’ என்ற முஸ்லிம் இளைஞராக சிம்பு நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளார்.

ALSO READ  "விஜய்" படத்தால் பாதிக்கும் சிலம்பரசன்...!

மேலும், பாரதிராஜா, S.A.C, S.J.சூர்யா, பிரேம்ஜி,
கருணாகரன், மனோஜ், டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

‘மாநாடு’ படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்,

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டராக ப்ரவீன் கே.எல், கலை இயக்குநராக சேகர் மற்றும் ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் ஆகியோர் பணிபுரிகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர் !

News Editor

பிரபல நடிகருடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் பார்வதி !

News Editor

நண்பர்களுடன் ஆனந்தமாய் குளிக்கச் சென்ற நடிகருக்கு நேர்ந்த சோகம் :

naveen santhakumar