சினிமா

ரீ-மிக்ஸ் பாடல்கள் போர்… சொன்னது யார் தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சினிமாவில் ரீ-மிக்ஸ் பாடல்கள் போர் அடிப்பதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவை உலகளவில் கொண்டு சேர்த்ததில் ஏ.ஆர். ரகுமானின் பங்கு அளப்பறியது. அறிமுக படங்களில் இருந்து பல புதுமையான இசையை கையாண்ட அவர் ஏனோ பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. தற்போது அவர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ மற்றும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், பிரபுதேவுக்காக ‘முக்காபுலா’ பாடலை ரீமேக் செய்யும் உரிமையை விட்டுக்கொடுத்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

ALSO READ  வத்திக்குச்சி வனிதா…….திடீர் முடிவெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்…...

அதற்கு பதிலளித்த ஏ.ஆர்,ரஹ்மான், தனது பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவது தனக்கு மிகுந்த எரிச்சலை தருவதாக தெரிவித்துள்ளார்.மேலும் ‘ஓகே ஜானு’ படத்தில் இடம் பெற்ற ‘ஹம்மா ஹம்மா’ பாடல் ரீமேக் செய்யப்பட்டது தனக்கு பிடித்ததாகவும், மற்றவை தனக்கு பிடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இப்படி ரீமேக் செய்வதை தான் தொடர்ந்தால் , மக்கள் என்னை கிண்டல் செய்வார்கள் என கூறியுள்ளார்.

பிரபுதேவா தன் சினிமா பயணத்தில் தமிழில் ‘நியூ’ படத்தில் ‘தொட்டால் பூ மலரும்’ பாடலையும், அழகிய தமிழ் மகன் படத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ பாடலையும் ரீமிக்ஸ் செய்துள்ளார். இந்த 2 பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆக்‌ஷனுக்கு பிறகு ரொமான்ஸில் இறங்கிய அண்ணாச்சி ! 

News Editor

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி: நடிகர் துருவாவுக்கும், மனைவிக்கும் கொரோனா… 

naveen santhakumar

சொந்தமாக வெப்சைட் தொடங்கும் யுவன் !

News Editor