உலக நாடுகள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை தடுக்க தவறியதால், ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஐ.நா. அளித்த அறிக்கையின் படி, உலகெங்கிலும் காலநிலை மாற்றம், இடம்பெயரும் மக்கள் தொகை, மோதல், சுற்றுச்சூழல் சீரழிவு, வணிக நடைமுறைகள் ஆகியவை காரணமாக ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
குழந்தையின் வளர்ச்சி , நிலைத்தன்மை மற்றும் சம பங்கு உள்ளிட்ட மூன்று பிரிவுகளிலும் ஒரு நாடு கூட சிறப்பாக செயல்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் மற்றும் மருத்துவ இதழ் தி லான்செட் ஆகியவை வெளியிட்ட அறிக்கையில், ‘பணக்கார நாடுகளில் உள்ள குழந்தைகள் உயிர்வாழ்வதற்கும் நல்வாழ்விற்கும் சிறந்த வாய்ப்பைக் கொண்டுள்ளது’ என்பதைக் கண்டறிந்துள்ளது.
இனியாவது பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை கவனமாக எதிர்கொண்டு எதிர்கால சந்ததியினரின் வாழ்வை காக்க உலக நாடுகள் முயற்சிக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.