ஜீ தமிழ் தொலைக்காட்சி செம்பருத்தி சீரியலில் இருந்து நடிகர் கார்த்தியை நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மிக முக்கியமான தொடர் செம்பருத்தி, இந்த சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
இதில் ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், அவரது மூத்த மகன் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக் ராஜ் நடித்து வருகிறார், அவருக்கு ஜோடியாக ஷபானா ஷாஜகான் நடித்துள்ளார். இந்த தொடர் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
அதைத்தொடர்ந்து தற்போது தொடரின் நாயகனாக நடித்துவரும் கார்த்திக் ராஜ் விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. அதைத்தொடர்ந்து சில நாட்கள் ஒளிபரப்பான எபிசோட்களில் கார்த்திக் ராஜ் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களே இடம்பெற்றிருந்தன. இதனால் ரசிகர்கள் கார்த்திக் ராஜ் என்ன ஆனார் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தான் ஜீ தொலைக்காட்சி “செம்பருத்தி” சீரியலில் இருந்து நடிகர் கார்த்திக் ராஜ் விலகி இருப்பதாக அறிவித்துள்ளது. அதில், “செம்பருத்தி சீரியலை தன்னுடைய கடின உழைப்பு அர்ப்பணிப்பு மூலம் வெற்றி அடைய செய்த நடிகர் கார்த்திக் ராஜ் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளது.
அதன்பிறகு எதிர்பாராத சில காரணங்களால் அவருக்கு பதிலாக செம்பருத்தி தொடரில் கதாநாயகன் ஆதிக்கு பதிலாக வேறொருவர் நடிக்க உள்ளார் என்பதனையும், கார்த்திக் ராஜின் அடுத்த பயணத்திற்கு எங்களுடைய வாழ்த்துக்களையும், ஜீ தமிழ் உடனான அவரது தொடர்பு நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.