இயக்குநர் பாலா தமிழில் நான் கடவுள், அவன் இவன், பிதாமகன் போன்ற பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். இதன் மூலம் இவருக்கென தனி அடையாளத்தை தமிழ் சினிமாவில் வகுத்துள்ளார். இந்த நிலையில்தான் இவரின் இயக்கத்தில் கடைசியா வெளிவந்த திரைப்படம் வர்மா.
விகர்ம மகன் த்ருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். வர்மா படம் தயாரிப்பாளருக்கு திருப்தியை தராததால் இந்த படம் ஓடிடி யில் வெளியாகியது. அதனை தொடர்ந்து இந்த பாடம் சர்ச்சை கலந்த விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையிலதான் பாலா இயக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்க இருப்பதாகவும், படத்திற்கு இசைப்புயல் ‘ஏ ஆர் ரகுமான்’ இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாலா மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் கடைசியாக நாச்சியார் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர்.
அதனையடுத்து தற்போது இந்த படத்தில் மீண்டும் பாலா ஜிவி கூட்டணி அமைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.
மேலும் இயக்குனர் பாலா ஏ.ஆர் ரகுமானுடன் ஜூம் காலின் மூலம் படத்தினை உறுதிசெய்தார், அதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க இருப்பது இதுவே முதல் முறை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.