விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற ஒரு புதிய படத்தினை உருவாக்கயுள்ளார். அந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் பூஜையுடன் துவங்கப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரவும் மற்றும் ஒரு கதாநாயகியாக சமந்தாவும் நடிக்க உள்ளார்கள்.
கடந்த 2்015்ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து வெளியான ‘நானும் ரவுடி தான்’ படம் ஒரு வெற்றிப்படமாகவே அமைந்தது. அதனை தொடர்ந்து மீண்டு விக்னேஷ் நயன்தாரா விஜய்சேதுபதி ஆகிய மூன்று பேரின் கூட்டணி வெற்றி பெறுமா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தயில் ஏற்படத் தொடங்கியுள்ளது.
கடந்த பிரவரி 14 அன்று காத்து வாக்குல காதல் என்ற படத்தினை இயக்குனர் அறிவித்தார். காரோண காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் ‘காதுவாக்குல ரெண்டு காதல்’ படம் சில தினங்களுக்கு முன்புதான் பூஜையுடன் தொடங்கியது. முதல் நாளில் நடிகர் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
நடிகை நயன்தாரா, ‘அண்ணாத்த’ படத்திற்காக ஹைதராபாத் சென்றுள்ளதால் முதற்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. நயன்தாரா ஒரே நேரத்தில் இவ்விரு படத்திலும் கவனம் செலுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் படக்குழுவினரோடு இணைந்த நடிகர் விஜய் சேதுபதியை, விக்னேஷ் சிவன் பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. அந்த வகையில், நடிகை சமந்தாவும் தற்போது படக்குழுவினரோடு இணைந்துள்ளார். விக்னேஷ் சிவன் சமந்தாவை வரவேற்கும் விடியோவை தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.