லாஸ்லியாயுடன் காதல் இருக்கா இல்லையா என்ற கேள்விக்கு கவின் அதிரடியாக பதிலளித்துள்ளது கவிலியா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.வீட்டிற்குள் அடிக்கடி சாக்ஷி, கவின் மற்றும் லாஸ்லியாவிடம் காதல் சண்டை ஏற்பட்டது.
பின்பு போட்டியிலிருந்து பாதிலேயே 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கவின் வெளியேறினார்.வெளியேறும் போது லாஸ்லியாவிடம் வெளியே வந்த பின் நம் காதலை தொடருவோம் என்று கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில் வெளியே வந்து கவினுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து சமீபத்தில் 2019 ஆம் ஆண்டின் Most Desirable Men On Television என்ற பட்டியலில் முதல் இடம் கிடைத்தது.
அப்போது பேட்டியில் கவினிடம் நீங்கள் சிங்கிளா, கமிடட்டா என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு சிங்கிள் என்று ஒரு வார்த்தையிலேயே கவின் பதிலளித்தது கவின் லாஸ்லியா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.