மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர்.ரகுமான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், மோகன்பாபு, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் “பொன்னியின் செல்வன்”.
கொரானோ ஊரடங்கிற்குப் பிறகும் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவில்லை. இந்நிலையில் அக்டோபர் மாதத்திலிருந்து இலங்கையில் படப்பிடிப்பை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், மணிரத்னம் அதற்குள் அவரது முடிவை மாற்றிவிட்டார்.
குறைந்தபட்சம் 500 பேராவது படப்பிடிப்புக்குத் தேவைப்படுமாம். அவ்வளவு கூட்டத்தை வைத்துக் கொண்டு கொரானோ தொற்று இன்னும் குறையாத இந்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்துவது சரியல்ல என அடுத்த வருடத்திற்கு மாற்றிவிட்டாராம்.
அநேகமாக ஏப்ரல் மாதத்திற்குப் பிறகுதான் படப்பிடிப்பு நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். தெலுங்கில் ராஜமவுலி அவரது பிரம்மாண்ட ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்.ஆனால் மணிரத்னம் இன்னும் தயங்கிக் கொண்டிருக்கிறார்.