சென்னை:-
சம்பளத்தை 20 முதல் 30 சதவிகிதம் வரை குறைத்துக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 2 வருடத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தமிழ்படம் பெண்குயின். இப்படம் வரும் 19ம் தேதி OTT தளத்தில் வெளிவருகிறது. தமிழில் கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்த படம் சர்க்கார்.
கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ்’ தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் வரும், 19ம் தேதி ‘அமேசான் பிரைம்’ வாயிலாக, ஆன்லைனில் வெளியாகிறது.
லாக்டவுன் லைஃப்:-
பள்ளியில் படித்த காலத்துக்கு பிறகு இப்போதுதான் 40 நாள் தொடர்ந்து வீட்டில் இருக்கிறேன். இடையில் விட்டிருந்த வயலினை கற்று முடித்தேன். புதிதாக யோகா கற்றேன். நிறைய உடற்பயிற்சி செய்தேன். சுற்றி இருக்கிற மக்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தேன்.
சம்பள குறைப்பு:-
நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அப்பா தயாரிப்பாளர் என்கிற முறையில் கருத்து சொன்னார். நடிகை என்கிற முறையில் அதை நான் வரவேற்கிறேன். எனது படங்களுக்கு நான் வாங்கும் சம்பளத்தில் இருந்து 20 முதல் 30 சதவிகிதம் குறைத்து கொள்வேன். நான் மட்டும் அல்ல சினிமாவில் உள்ள அனைவரும் இதனை செய்ய வேண்டும் என்றார்.