பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற லாஸ்லியாவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த வீட்டிற்குள் இருக்கும் போது இவருக்கு ஆர்மி எல்லாம் வைத்து கோலாகலப்படுத்தி கொண்டு வந்தனர்.
தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்திற்கு அவர் போட்டிருக்கும் பதிவு பல ரசிகர்களின் மனதை காயப்படுத்தி கொண்டு வருகிறது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு கவினுக்கும் அவருக்கும் அந்த அளவிற்கு எந்த டச்சும் இல்லாமல் தான் இருந்திருக்கிறது.
இருவரும் சேர்ந்து எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் தவிர்த்து தான் இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் லாஸ்ஸியா தற்போது புகைப்படங்களுடன் வெளியிட்ட வரிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
“நான் வாழ்ந்தேன் நேசித்தேன் தவறவிட்டேன் நம்பினேன் அதுமட்டுமின்றி தவறுகளும் பண்ணினேன்,ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நான் கற்றுக்கொண்டேன்” என்று அவர் எழுதி இருந்த வரிகள் தன் காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படி தெரிவித்துள்ளதாக சந்தேகம் பெருமபாலானோரின் மனதிலும் தோன்றியது.
இதனால் ரசிகர்கள் லாஸ்லியாவின் இந்த கமெண்டை பார்த்து மிகவும் மனம் நொந்து போய் இருக்கிறார்களாம். இந்த வயசிலேயே இப்படி எல்லாம் ரொம்ப அனுபவப்பட்டது போல பேசுகிறீர்களே, நீங்கள் இந்த மாதிரி கூறுவது எங்களுக்கும் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என்று அவருக்கு ஆறுதல் தெரிவித்து கொண்டு வருகின்றனர்