தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். கிட்டத்தட்ட 27 வருடங்களாக இந்த இடத்திற்கு போராடி தற்போது முன்னணியில் இருக்கிறார்.
அதற்கு தகுந்தார்போல் கடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய்யின் படங்கள் மற்ற மாநிலங்களிலும் உலக அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இப்படிப்பட்ட தளபதி விஜய்யை சமீபகாலமாக ஒருவர் தாக்கி பேசி வருவது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக தளபதி ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மீரா மிதுன் என்பவர் சமீபகாலமாக விஜய் மற்றும் சூர்யாவை தாக்கி பேசி வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக சூர்யாவை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு தொடர்ந்து விஜய்யை தாக்கி பேசி வருகிறார்.
விஜய்யிடம் இருந்து ஏதாவது எதிர்க்கருத்து வருமா என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் போல. நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது போல தளபதி விஜய்யும் வெளியிட்டால் அது உலக அளவில் பிரபலம் ஆகும் எனவும் அதை வைத்து எப்படியாவது பிரபலமாகி கொள்ளலாம் எனவும் மீராமிதுன் ஐடியா போட்டுள்ளாராம்.
அதனால் ஒருபடி எல்லை மீறி “தளபதி விஜய் தலைக்கு விக்கு எங்கு வாங்குகிறார்??? என்று எனக்கு தெரியும்” என கூறியுள்ளது பலருக்கும் கோபத்தை வர வைத்துள்ளது.
இதேபோல், நாளைக்கு மற்ற நடிகர்களையும் அவர் தாக்கி பேசக்கூடும். ஆகையால் விஜய்யை பிடிக்காதவர்களாக இருந்தாலும் இந்த மாதிரி விஷயத்திற்கு துணை போகவேண்டாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
மிக விரைவில் மீரா மிதுன் தர்ம அடி வாங்க போகிறார் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…