சினிமா

“நெஞ்சம் மறப்பதில்லை” படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை. இதில் ரெஜினா கெசன்ட்ரா, நந்திதா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு  அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

2016-ஆம் ஆண்டே நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அணைத்து பணிகளும் முடிவடைந்து வெளியிட்டு தயாராகியது. ஆனால் படக்குழு படத்தின் ரிலீஸ்  தேதியை அறிவிக்காமல் இருந்தது. ஏற்கனவே வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

 
இதனையடுத்து வரும் மார்ச்  5 ஆம் தேதி “நெஞ்சம் மறப்பதில்லை” படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.  இப்படத்தை தயாரித்த “எஸ்கேப் ஆர்டிஸ்ட்” நிறுவனம் ரேடியன்ஸ் நிறுவனத்திற்கு தரவேண்டிய 1.24 கோடி கடன் தொகையை நிலுவையில் வைத்துள்ளதால் அந்நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நிதிபதி ஆர்.டி ஆஷா படத்திற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.


Share
ALSO READ  இந்தியாவை மிரட்டும் கொரோனா !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜயுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் !

News Editor

நடிகர் விஜய் முதல்வருடன் திடீர் சந்திப்பு..!

News Editor

உள்ளே வந்தார் உதயநிதி – சொன்ன தேதியில் வெளியானது மாநாடு – முழு விபரம் உள்ளே

naveen santhakumar