‘மேயாத மான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது ‘இந்தியன் 2’, ‘பொம்மை’, ‘குருதி ஆட்டம்’, ‘கசடதபற’, ‘பெல்லி சூப்புலு’ தமிழ் ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் ப்ரியா பவானி சங்கரும் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவின. ஆனால், ப்ரியா பவானி சங்கர் தரப்பில் எவ்வித மறுப்புமே தெரிவிக்கப்படவில்லை.
இவர்கள் இருவரும் தற்போது ‘பொம்மை’ படத்தில் நடித்துவருகின்றனர்.
இந்நிலையில், தனது காதலர் ராஜவேலு பிறந்த நாளன்று தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அவர்களின் காதலை உறுதிப்படுத்தினார் ப்ரியா பவானி சங்கர்.
PBS முன்னணி நடிகையாக உள்ளபோதே, தன் காதலரை அறிமுகப்படுத்தியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
இதனிடையே, தான் காதலில் இருப்பதை அறிவித்தது தொடர்பான கேள்விக்கு ப்ரியா பவானி சங்கர் பதில் அளிக்கையில்:-
என் காதலர் ராஜ் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு வைரலாகிவிட்டது.
கடந்த ஆண்டு கூட நான் அவருக்கு வாழ்த்து சொல்லியிருந்தேன். நாங்கள் எங்கள் இளம் பருவத்திலேயே சந்தித்துக் கொண்டோம். அப்போது இருந்த அன்பும், வெகுளித்தனமும் இன்னும் மாறாமல் அப்படியே உள்ளது. நாளை எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவளைப் நன்றாக பார்த்துக் கொள்ள ஏற்றவராக ராஜ் இருப்பார். எனது காதலில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றார். கல்யாணம் குறித்து சீக்கிரமே சொல்கிறேன்” என்றும் ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரியாவின் இந்த பதிவு பிரியா பவானி சங்கர் ஆர்மிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.