சென்னை:
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் பிரியா.பிரியா பவானி சங்கர் அதற்கு முன்னர் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து இருந்தாலும் தற்போது வெள்ளித்திரையிலும் கொடிகட்டி பறந்து வருகிறார் .
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் நடத்தி தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .இவர் முதன்முதலில் அறிமுகமான சீரியலில் கதாநாயகன் அமித்திற்கும் கெமிஸ்ட்ரி நன்றாக செட்டாகி இருந்ததால் இந்த சீரியல் அனைத்து தரப்பினரையும் நன்றாக ரசிக்க வைத்திருந்தது. முதல் சீரியலிலே தன்னுடைய பெயரிலேயே இவர் நடித்திருந்தார்.இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவருக்கு ‘மேயாத மான்’ படத்திலிருந்து நடிக்க வாய்ப்பு வந்ததால் சீரியலை விட்டு திரைப்படத்திற்கு சென்றுவிட்டார்.ஆனால் அவருடைய சீரியல் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
தற்போது இவர் சமூக அக்கறையோடு ஒரு வீடியோவை வெளியிடுவதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து இருக்கிறார்கள் .அதனைப் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் காண்டாகி நெட்டிசன்களை திட்டி தீர்த்தாலும் தற்போது பிரியாவும் தன்னுடைய பங்குக்கு இன்ஸ்டாகிராமில் அவர்களுக்காக ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார் இதுதான் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.சமூக வலைத்தளத்தில் தற்போது அதிகமாக பார்க்கும் ஒரு செய்தியாக ‘மித்ரா பைட்ஸ்’ அதாவது மித்ரா என்ற 2 வயது குழந்தைக்கு மருத்துவ செலவிற்கு சுமார் 16 கோடி தேவைப்படுகிறது எனவும் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருக்கும் அவர்களுக்கு இது மிகப்பெரிய விஷயம் அதனால் உங்களால் முடிந்த அளவு பத்து ரூபாயோ நூறு ரூபாயை கொடுத்து உதவுங்கள் என்று பிரபலங்கள் பலரும் முன்னெடுத்து தங்களால் முடிந்த நிதி திரட்டி கொண்டிருக்கின்றனர் .
அந்த வகையில் தான் நடிகை பிரியா பவானி சங்கர் அது குறித்து ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார் .அதைப் பார்த்து பலரும் தங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறோம் என கருத்து தெரிவித்திருக்கின்றனர் .ஆனால் அவர் பேசிய அந்த வீடியோவில் ஒரு நெட்டிசன் நீங்க லுங்கியா கட்டி இருக்கீங்க..????அது என்ன பிராண்டு கொஞ்சம் எழுந்து நில்லுங்கள் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார் .
இந்த கமெண்டை பார்த்த பிரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் “இதுவே மற்ற நேரமாக இருந்தால் உங்களை விட நானே நீங்கள் சொன்ன காமெடிக்கு சிரித்திருப்பேன்.ஆனால் நான் ஒரு உயிரைக் காப்பாற்றுவது பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன் நீங்களோ நான் என்ன டிரஸ் போட்டிருக்கேன் என ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என அவரை திருப்பி கேட்டிருக்கிறார் .உங்களுக்கு முடிந்தால் உதவி செய்யுங்கள் இல்லையா அமைதியாக சொல்லுங்கள் எதில்தான் கலாய்க்க வேண்டும் சீண்ட வேண்டும் என்று இல்லையா உங்களால் முடிந்த உதவியை நீங்களும் அந்த குழந்தைக்கு செய்ய விரும்பினால் அவர்களுக்கு செய்யவும்” என்று கூறியிருக்கிறார்.