சினிமா

இயக்குநர் சுராஜுக்கு கொரோனா தொற்று உறுதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Suraj
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதால், வடிவேலு மீதான ரெட் கார்டை நீக்கிவிட்டது தயாரிப்பாளர் சங்கம். இதனால் தொடர்ச்சியாகப் படங்களில் காமிட்டாகியுள்ளார். செகன்ட் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பிக்க திட்டமிட்ட வடிவேலு, லைகா தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ALSO READ  2வது முறை.. பேரதிர்ச்சியில் அறிவாலயம்!

இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நேற்று வடிவேலு லண்டணில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளார். ஒமைக்ரான் பரவல் காரணமாக விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. மேலும் முதற்கட்ட பரிசோதனையிலேயே எஸ்.ஜீன் மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, நடிகர் வடிவேலு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வடிவேலுவின் நாய் சேகர் பட இயக்குநரான சுராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் யோகிபாபு:

naveen santhakumar

சல்மான் கான் வெளியிட்ட அறிக்கை…அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்!

News Editor

தெலங்கானா என்கவுண்டர் குறித்து நடிகை சமந்தா ட்விட்டர் பதிவு…

Admin