சமீபத்தில் இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சஞ்சீவ் விஜய்-ன் நட்பு குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் 5 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் திரைப்படங்கள் எல்லாம் இன்னும் படப்பிடிப்பை முழுமையாக தொடங்கவில்லை. நடிகர், நடிகைகள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார்கள். இந்த ஊரடங்கு நேரத்தில் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்த நடிகர் விஜயின் புகைப்படம் சமீபத்தில் வைரலானது.
அந்த புகைப்படத்தை விஜயின் பால் சிநேகிதனான சஞ்சீவ் பகிர்ந்திருந்தார்.இந்நிலையில் சமீபத்தில் இணையதள சேனல் ஒன்றிற்கு பேசிய சஞ்சீவ் விஜயின் நட்பு குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதில் “சில மாதங்களுக்கு முன்பு எனக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்தது. அதனால் எனது குடும்பத்தினரை உறவினர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனியாக வீட்டில் இருந்தேன். அப்போது விஜய் போனில் பேசினார். அடுத்த 15 நிமிடங்களில் என் வீட்டிற்கே வந்து செக்யூரிட்டியிடம் உணவு வழங்கிவிட்டு சென்றார். கொரோனா அறிகுறி என்பதால் விஜயை அருகில் சென்று நான் பார்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருப்பதாகவும், டெல்லியில் காற்று மாசு காரணமாக ஷூட்டிங் தடை செய்யப்பட்ட போது விஜயுடன் கிரிக்கெட் விளையாண்டு தனது நேரத்தை செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.