சினிமா

பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ் ‘முல்லை’ தூக்கிட்டு தற்கொலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.முதன்முதலாக மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் சித்ரா.அதனைத் தொடர்ந்து ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் ‘சரவணன் மீனாட்சி (சீசன் 2)’ சீரியலில் ‘கலையரசி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ‘முல்லை’ என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார்.இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால் இவருக்கு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

ALSO READ  கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட் வெளியீடு !

இந்நிலையில் இன்று (09.12.20) அதிகாலை சென்னை அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இது சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பலரும் சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சித்ராவில் உடலை கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வலிமை ரிலீஸ் – தள்ளிப்போனதற்கான காரணம் என்ன?

News Editor

ரசிகரின் திருமணத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா..!

News Editor

இந்திய சூப்பர் ஸ்டார்கள் இணைந்து வெளியிட்டுள்ள குறும்படம்…

naveen santhakumar