தமிழ் சினிமாவில் அழகும், திறமையும் இருந்தும் சில கதாநாயகிகள் அதிகம் வெற்றியை பெற முடியாமலோ அல்லது மற்றவர்களால் கவனிக்கப்படாமலோ போய்விடுகிறார்கள். அவர்களில் நடிகை சுனைனாவும் ஒருவர்.
தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக நகுலுக்கு ஜோடியாக அறிமுகமானவர்,தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
‘வம்சம், நீர்ப்பறவை’ போன்ற படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது,அதுமட்டுமல்லாது இப்படத்தில் அவருடைய கதாபாத்திரமும், நடிப்பும் அதிகம் ரசிக்கப்பட்டது. எனினும் அந்த அரிய வாய்ப்பை அவர் தக்க வைக்கத் தவறிவிட்டார்.
கடந்த வருட கடைசியில் வெளிவந்த ஆன்த்தாலஜி படமான ‘சில்லுக்கருப்பட்டி’ என்ற படத்தில் ‘ஹே அம்மு’ என்ற படத்தில் சமுத்திரக்கனி மனைவியாக அமுதினி என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். அவரைப் பலரும் பாராட்டினார்கள்.
அந்தப் படம் பற்றி இப்போது தன் மகிழ்ச்சியை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார் சுனைனா.
“இன்பாக்ஸ் முழுவதும் அன்பு கிடைத்துள்ளது. சில்லுக்கருப்பட்டி பற்றி, அம்மாக்கள், கணவர்கள், உறவில் இருப்பவர்கள், டாக்டர்கள் என பலரிடமிருந்து அதிகமான அன்பு கிடைத்தது.அந்த மெசேஜ்களை(message) சேமித்து வைத்துள்ளேன். இதுவரை ஷேர்(share) செய்யாதவற்றை உங்களுடன் இனி ஷேர் செய்கிறேன்,”
இவ்வாறு சுனைனா தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.