தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் செந்தில். இவரும் கவுண்டமணியும் இணைந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் மக்களை மெய்மறந்த சிரிக்க வைத்திருப்பார்கள். இவர்களின் காமெடிக்காகவே பல படங்கள் நீண்ட நாட்கள் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தன. இந்நிலையில் நடிகர் செந்தில் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கும் புதிய படத்தில் செந்தில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “ஒரு கிடாயின் கருணை மனு” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரேம்ஜி நடிக்கும் “சத்திய சோதனை” என்ற படத்தை இயக்கியுள்ளர். இப்படத்தின் அணைத்து விதமான பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் சங்கையா செந்தில் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த பிரவரி முதல் வாரத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ஆயுள் தணடனை கைதியாக நடிகர் செந்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.