தமிழகம்

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ளநிலையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி முதல் தொடக்கி நடைபெற்று வந்தது.  கொரோனா பரவல் காரணமாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது. 

ALSO READ  அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்..

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 4,567 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 3,818 ஆண்கள்,  747 பெண்கள்  2 திருநங்கைகள் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.  வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 22ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

90s ஃபேவரைட் விஜே ஆனந்தக்கண்ணன் திடீர் மறைவு- என்ன நடந்தது?

naveen santhakumar

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் MP ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்…..

Shobika

108 ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடிப்பு ! 

News Editor