சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் தண்டனை காலம் 27-ந் தேதி உடன் முடிவடைந்து அன்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அதனையடுத்து சிறைத்துறைக் கண்காணிப்பாளர் லதா தலைமையிலான போலீசார், சசிகலாவிடம் கையெழுத்து பெற்ற நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை முடிவு பெற்றதற்கான ஆவணங்களை சசிகலாவிடம் ஒப்படைத்தனர். சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதால் பிப்ரவரி முதல் வாரத்தில்தான் சசிகலா சென்னை திரும்புவார் என தகவல்கள் வெளியாகிருந்த நிலையில் தற்போது மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,”10 நாட்களாக மருத்துவமனையில் சிகிக்சை எடுத்து வரும் சசிகலாவின் உடல் நிலை குணமடைந்துள்ளதால் அவர் நாள் டிச்சார்ஜ் செய்யப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.