இயக்குனர் வசந்தபாலன் ஆல்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஆல்பம் படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து வெயில், அங்காடி தெரு, அரவான், காவியத் தலைவன், உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். மேலும் இவர் இயக்கிய வெயில் படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து ‘அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இது குறித்தான அறிவிப்பை நேற்று வெளியிட்ட வசந்தபாலன், இது தன்னுடைய 25 வருடக் கனவு என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ‘அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் நடித்துப் பிரபலமான அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது படத்தில் கதாநாயகியாக துஷாரா நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் “‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.