நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்ட் நீக்கப்பட்டர்தை தொடர்ந்து சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார் நடிகர் வடிவேலு.
மேலும், ரெட் கார்டு நீக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளது தனக்கு மறு ஜென்மம் என கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும், அப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் வடிவேலு புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டதால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார்.
இதனிடையே இயக்குனர் ஷங்கர் – நடிகர் வடிவேலு இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து வடிவேலு கூறியதாவது,
மீண்டும் சினிமாவில் நான் தோன்றப் போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு போல் இருக்கிறது. சினிமாவில் இது எனக்கு மறுபிறவி. சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் செப்டம்பர் முதல் நடிக்கவுள்ளேன்.
தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டு அடுத்து காமெடியானாகவும் நடிக்கவுள்ளேன். இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரைச் சந்தித்த பின்னர் எனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது. மீண்டும் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்” என்றும் கூறியுள்ளார் வடிவேலு.