சினிமா

‘என்னை ஆதரித்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் நன்றி’; விஷ்ணு விஷால் அறிக்கை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். பல வெற்றி படங்களை கொடுத்த இவர் நேற்றோடு தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அதில்,””இது நம்பமுடியாத 12 ஆண்டுகள், இப்பயணம் ஒரு மிகச்சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. என்னுடைய பயம், வலி அனைத்தையும் கடந்து ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பாதையில் என்னை ஆதரித்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் நன்றி.

வரும் ஆண்டுகளில் இன்னும் சாதிப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் என்னுடைய ரசிகர்கள், பார்வையாளர்களுக்கு என்னுடைய அன்பைப் பகிர்கிறேன். ‘காடன்’, ‘எஃப்.ஐ.ஆர்’, ‘மோகன் தாஸ்’, ‘இன்று நேற்று நாளை 2’, இயக்குநர் செல்லாவுடன் பெயரிடப்படாத ஒரு படம் மற்றும் இயக்குநர் கோபிநாத் உடன் ஒரு படம் ஆகியவற்றில் பணிபுரிந்து வருகிறேன். 

ALSO READ  மக்களை இன்னும் அதிகமாக சிரிக்க வச்சுட்டு தான் இந்த உசுரு போகனும்..! -வடிவேலு பேட்டி.

இன்னும் சில அற்புதமான கதைகள் மற்றும் இயக்குநர்களுடன் பணிபுரியவுள்ளேன். கடந்த ஆண்டு நம் அனைவருக்குமே மிகவும் கடினமான ஒரு ஆண்டாக இருந்தது. தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியாகவும் எனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், வாழ்க்கை என்பது தொடர்ந்து முன்னேறிச் செல்வதுதான். தொடர்ந்து அலையுடனோ அல்லது அலையை எதிர்த்தோ நீந்திக் கொண்டேயிருப்போம். உங்கள் மீது மிகுந்த அன்போடு விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிக்பாஸ் புகழ் ஆரவிற்கு இந்த நடிகையுடன் திருமணமாம்….அப்போ ஓவியா???????

naveen santhakumar

விஜய் சேதுபதி படத்தின் ட்ரைலர் வெளியிட்டு தேதி அறிவிப்பு!

News Editor

பியர் கிரில்ஸுடன் காட்டுக்கு செல்லும் அந்த பிரபல நடிகர்!

News Editor