இந்தியா

என் பந்தை காணல…காவல் நிலையத்தில் புகாரளித்த சிறுவன்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சூரில் தன்னுடைய கால்பந்து திருடுபோனதாக காவல் நிலையத்திற்கு போன் மூலம் சிறுவன் ஒருவன் புகாரளித்துள்ளான்.

திருச்சூரை சேர்ந்த அதுல் என்ற 10 வயது சிறுவன், பையனூரில் உள்ள காவல் நிலையத்திற்கு போன் செய்துள்ளான். அப்போது தன்னுடைய கால்பந்து காணாமல் போனதாகவும், கண்டுபிடித்து தருமாறும் கூறியுள்ளான்.

மேலும் தன்னுடைய பெற்றோர் புதிய பந்து வாங்கி தருவதாக கூறியும், தனக்கு காணாமல் போன பந்து தான் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளான். அதனால் தான் காவல் நிலையத்திற்கு போன் செய்ததாகவும் கூறியுள்ளான்.

ALSO READ  ஜியோ தான் டாப்… மத்ததெல்லாம் வேஸ்ட்…எதுல தெரியுமா?

இதனையடுத்து பையனூர் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சிறுவனின் காணாமல் போன பந்தை தேடிய போது, அதே ஊரில் கால்பந்து விளையாடும் சிலர் பந்தை எடுத்தது தெரியவந்தது. உடனே அவர்களை பிடித்த காவல் துறையினர் பந்தை மீட்டனர்.

பின்னர் சிறுவனை வரவழைத்து பந்தை உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒப்படைத்தார். இதனிடையே சிறுவனின் புகாரை புறந்தள்ளாமல் நடவடிக்கை எடுத்த காவல் துறையினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

PINUP-AZ Online Casino Pin U

Shobika

ஓமன் சுல்தான் காபூஸ் மறைவு- இந்தியா சார்பில் ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிப்பு

Admin

டெல்டா பிளஸ்- இந்த கிளம்பிருச்சுல புதுசா ஒன்னு ; மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

News Editor