தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
நாடு முழுவதும் மானியமில்லாத சிலிண்டர்கள் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு குடும்பத்திற்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் மானியவிலையில் வழங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் கணிசமான அளவு மானியமில்லாத சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.
ஆனால் ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு இன்று திடீரென மானியமில்லாத சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.144 அதிகரித்து ரூ 881 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வழக்கமாக இந்த விலை உயர்வு மாதத்தின் முதல் தேதியில் அறிவிக்கப்படும். ஆனால் இந்த மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் நடுத்தர குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.