தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் இருந்து ரஜோரி நோக்கி சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் சூரன்கோட் பிரிவில் இருந்து ரஜோரி மாவட்ட தலைமையகம் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தேரி ரால்யோட் பகுதிக்கு வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் பயணிகள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து போலீசார், ராணுவம் மற்றும் சுகாதார துறையினர் ஆகியோர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.