பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை கிராமம் ஒன்றில் நடந்த பீடி பிடிக்கும் போட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டி பெண்களுக்கானது என்பதே அதன் சுவாரசியம். அதாவது இப்போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் முழு பீடியையும் விரைவாக இழுத்து முடிக்க வேண்டும். யார் முதலில் இழுத்து முடிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். ஊர் மக்களின் பலத்த ஆவரவரத்துக்கு மத்தியில் களமிறங்கிய 4 பெண்கள் போட்டி போட்டு பீடியை வேகமாக புகைத்துள்ளனர். இந்தக் காட்சிகள் தான் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
விளையாட்டு போட்டி என்பது அடுத்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, யாரையும் கெடுப்பதாக இருக்க கூடாது என சமூகவலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது.