தெலங்கானா எல்லையில் தண்டேவாடா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திற்கும் தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோதகுந்தம் மாவட்டத்திற்கும் இடையேயான வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக சிறப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அங்கு பதுங்கி மாவோயிஸ்டுகள் காவலர்கள் மற்றும் சிறப்புப் படைகளைத் தாக்க,மாவோயிஸ்டுகள் அணுகுண்டு தயாரித்து வருவதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இரு மாநில சிறப்புப் படைகளும் இணைந்து நடத்திய தாக்குதலில் 4 பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 6 முதல் 7.30 மணி வரை 6 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.