உருளைக் கிழங்கு விவசாயம் செய்து வருடத்திற்கு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ள நிகழ்ச்சி சம்பவம் குஜராத்தில் அரங்கேறி உள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜிதேஸ் படேல் என்பவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் வீட்டில் யாரும் படிக்காத நிலையில் ஜிதேஸ் வேளாண் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
முதலில் குடும்பத்திற்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்ட ஜிதேஸ், பின்பு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஜிதேஸ் லேடி ரோசட்டா என்ற ரகத்தை சேர்ந்த உருளைக்கிழங்கை ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டு வருகிறார்.
சிப்ஸ் பிஸ்கட் தயாரிக்க பயன்படுவதால் ஐடிசி நிறுவனங்களுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ 17 ரூபாய்க்கு என விற்பனை செய்யப்படும் இந்த வகை உருளைக்கிழங்கு ஆண்டிற்கு கோடிக்கணக்கில் விற்பனையாகும் என ஜிதேஷ் கூறியுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு மட்டும் குஜராத்திலிருந்து ஒரு டன் உருளைக்கிழங்கு இந்தோனேஷியா ,குவைத் ,சவுதி அரேபியா ,ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.