இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலி, மீண்டும் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், 2020-ஆம் இந்தியா – சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய ராணுவத்தின் பதிலடியில் ஏராளமான சீன ராணுவத்தினரும் உயிரிழந்தனர்.
எல்லையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், மத்திய அரசு பாதுகாப்பு காரணங்களை காட்டி டிக் டாக், பப்ஜி உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு கடந்த வருடம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி தடை விதித்தது.
தற்போது தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு, பேட்டில்கிரவுண்ட் என்ற வேறு பெயருக்கு மாறி இந்தியாவுக்குள் வந்திருப்பதை போல, டிக் டாக் நிறுவனமும் இப்போது பெயர் மாற்றத்தோடு மீண்டும் இந்தியாவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி டிக் டாகின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் (byte Dance), மத்திய தொழிற்துறை அமைச்சகத்திடம் இதற்காக விண்ணப்பித்துள்ளது. அதில் இதன் காப்புரிமை, வர்த்தக முத்திரையை அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதில் டிக்டாக் (tic-Tok) கின் பெயர் டிக் டோக் (Tik-Tock) என்று இடம்பெற்றுள்ளது. இந்த சின்ன மாற்றத் தோடு இந்த செயலி மீண்டும் களமிறங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.