சீனாவில் கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டுள்ள Corona வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தையை பார்த்து மருத்துவர் அழும் வீடியோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட Corona வைரஸ் பாதிப்பு தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அங்கு வாழ்ந்து வரும் அயல் நாடுகளை சேர்ந்தவர்களை அந்தந்த நாடுகள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை சீனாவில் Corona வைரஸ் பாதிப்பால் 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் Corona வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று கண்ணாடியால் மூடப்பட்ட தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையை வெளியில் இருந்து பார்க்கும் மருத்துவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
ஏதுமறியாத அந்த பிஞ்சு குழந்தை வெளியே இருக்கும் மருத்துவரை கை காட்டி சைகை செய்து சிரிக்கிறது. இந்த வீடியோ அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது. விரைவில் Corona வைரஸ் பாதிப்பிலிருந்து அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற பிரார்த்தனை உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.