இந்தியா

குப்பைத்தொட்டியில் தலையில்லாமல் கிடந்த பெண்ணின் சடலம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தரப்பிரதேசம்:

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட்டில் உள்ள குப்பை கொட்டும் இடம் ஒன்றில்  தலையில்லாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பதேஹுல்லாபூர் பகுதியில் ஒரு குப்பை கொட்டும் இடம் உள்ளது. இங்கு ஒரு சாக்குப்பையை அங்கிருந்த தெரு நாய்கள் கிழித்து கொண்டிருந்தன.அப்போது அந்த பையில் இருந்து உடல் உறுப்புகள் வெளியே வந்தன. இதை அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பார்த்துவிட்டு தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

ALSO READ  காஞ்சிபுரம் அருகே அரங்கேறிய கொடூரம்:

இதையடுத்து அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடினர்.அந்த சாக்குப் பை அருகே சென்ற போது அழுகிய நாற்றம் வீசியது.அப்போது மனித உடலின் உறுப்புகள் இருந்ததை கண்டறிந்தனர். உடனே அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த சாக்குப்பையை பார்த்தனர். அதில் தலையில்லாத ஒரு பெண்ணின் உடல் இருந்தது. அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.மேலும் கொலையுண்ட பெண் யார்???? கொலைக்கான காரணம் என்ன????என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

ALSO READ  கணவன்-மனைவி மர்மமான முறையில் வீட்டில் கழுத்தறுத்து கொலை :

இதுபோன்று உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்று வருவது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சி நாளை தொடக்கம்!

Shanthi

பள்ளிகள் திறப்பு குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்:

naveen santhakumar

தீவிரவாதிகளுக்கு உதவி சஸ்பெண்டான காஷ்மீர் டி.எஸ்.பிக்கு ஜாமீன்!… 

naveen santhakumar