இந்தியா

உனக்கு மட்டுமல்ல உன் ஏரியாவுல எவனுக்கும் கல்யாணம் நடக்காது.. கொந்தளித்த மணப்பெண்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பரேலி:-

உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர்கஞ்ச் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் தடல் புடலாக நடந்து முடிந்தது. மறுநாள் காலையில் மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு தயாராகினார்கள்.

இந்நிலையில், மணமகனின் தங்கை உற்சாகமாக நடனமாடினார். இதை கண்ட மணமகனுக்கு சகோதரி மீது கடும் கோபம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த நாற்காலியை எடுத்து சகோதரியை அடித்தார்.

ALSO READ  கிராம மக்களால் கள்ளக்காதல் ஜோடிக்கு நேர்ந்த கதி

இதை கண்ட மணமகள் உடனடியாக கழுத்திலிருந்த மாலையை உதறி விட்டு மணமேடையிலிருந்து எழுந்தார். இவரை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று பகிரங்கமாக அறிவித்தார்.

இது போன்ற ஒரு முன் கோபக்காரருடன் என்னால் வாழ முடியாது. இப்போது தன் சகோதரியையே இப்படி அடிப்பவர் நாளை திருமணத்துக்கு பின் என்னையும் இப்படித் தான் அடிப்பார். பெண்களை மதிக்க தெரியாத இதுபோன்ற நபர்களுடன் என்னால் வாழ முடியாது’ என்று திருமணத்தை நிறுத்திவிட்டார்.

ALSO READ  கழுத்தளவு தண்ணீரிலும் கடமையை செய்த போலீசார்…

இதனிடையே மணமகன் ஒரு ராணுவ வீரர் என்று அந்த சமயத்தில் குடிபோதை போதையில் இருந்ததாகவும், அதனால் தான் இப்படி நடந்துகொண்டதாகவும் தெரிய வந்தது.

உறவினர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் மணமகள் அதை ஏற்கவில்லை. தங்கள் வீட்டுக்கு பெண் வீட்டார் திரும்பிவிட்டார். இதனால் மணமகன் குடும்பத்தினர் செய்வதறியாது திருமணமண்டபத்தில் நின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக பதவியேற்பு

News Editor

உள்துறை மந்திரி அமித்ஷாவின் DP-யை திடீரென முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் :

naveen santhakumar

திருமலையின் பசுமைத்தன்மையை பராமரிக்க சில வாகனங்களுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது:

naveen santhakumar