ராணுவ தளபதி நரவனே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லி
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி பயணம் செய்துள்ளனர். பிபின் ராவத் நிலைமை என்ன என்பது தான் தற்பபோதைய பெரும் கேள்வியாக உள்ளது. விமானம் தரையிறங்க 5 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் பயணித்த 14 பேரின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில், ராணுவ தளபதி நரவனே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசியுள்ளார். அவரிடம், ராணுவ விமானம் விபத்து குறித்து கூடுதல் தகவல்களை தெரிவித்துள்ளார்.