தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மும்பை
2024-ல் ஆட்சியைப் பிடிப்போம், ராகுல் காந்தி தலைமையில் அடுத்த லோக்சபா தேர்தலில் வெல்வோம் என்றும் எதிர்க்கட்சியான பா.ஜனதாவை தாக்கும் பணியே எனக்கு வழங்கப்பட்டு உள்ளது என்றும் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார்.
2014-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள்(காங்கிரஸ்) ஏமாற்றப்பட்டோம். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் இப்போதிருந்தே தாயாராகி வருகிறோம்.
2024-ம் ஆண்டு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். பாரதீய ஜனதா கட்சி இந்திய நாட்டை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது என்றும் தேசிய அளவில் பாரதீய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்று செய்தியாளர்களிடம் நானா படோலே தெரிவித்தார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.