டெல்லி:-
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மேலும் இரண்டு வார காலங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறையாததையடுத்து, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் ஏதேனும் இருக்குமா என்ற எதிர்பார்புகள் நிலவியது.
இந்நிலையில், நாடு முழுவதும் மேலும் இருவாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்களை பொறுத்தவரை சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.orange மண்டலத்தில் வாடகை கார்கள் 2 பயனிகளோடு இயங்கலாம் என்றும் பச்சை மண்டலத்தில் தனியார் நிறுவனங்கள் 33 % ஊழியர்களோடு, பேருந்துகள் 50 % பயணிகளோடு இயங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படவும் 2 வாரம் தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.