அரசியல் இந்தியா

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி- பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்- இளம்பெண் கைது…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூருவில் நடந்த CAA-NRC எதிர்ப்பு பேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் எழுப்பிய பெண்ணுக்கு ஓவைசி கண்டனம்.

பெங்களூரு:-

குடியுரிமை திருத்த சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)-யை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் எதிர்கட்சிகள் எதிர்ப்பு பேரணிகளும், போராட்டங்களும் நடந்தி வருகின்றன.

இந்நிலையில், பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நேற்று நடைபெற்றது.

இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹதுல் முஸ்லிமீன் (All India Majlis-e-Ittehadul Muslimeen) கட்சியின் தலைவர் அஸாரூதீன் ஓவைசி கலந்து கொண்டார்.

ALSO READ  தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான (NRC) பணிகள் வரும் ஏப்.1 முதல் துவங்குகிறது- மத்திய அரசு..

பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா லியோனா என்ற இளம்பெண் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் எழுப்பினார்.

அவரை தடுத்து நிறுத்திய ஓவைசி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ALSO READ  மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான கடிதம்..!!!!

மேலும், அந்த பெண்ணிற்க்கும் எனக்கோ எங்கள் கட்சிக்கோ எந்த தொடர்பும் கிடையாது. ஒருங்கிணைப்பாளர்கள் அப்பெண்ணை அழைத்திருக்க கூடாது.

இவ்வாறு நடக்கும் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருக்க மாட்டேன். நாங்கள் இந்தியாவிற்கு தான் இருப்போம் ஒருபோதும் பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து அந்த இளம்பெண் மீது 124ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்பின் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

лучшие Букмекерские Конторы Рейтинг Букмекеров Топ Бк 2024 Онлайн Ставки На Спор

Shobika

சிசிடிவியில் சிக்கிய அவலக் காட்சி….. குழந்தையை அடித்து உதைத்து கழுத்தை நெறித்த கொடூரத் தாய்:

naveen santhakumar

சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை- மத்திய அரசு…

naveen santhakumar