பெங்களூருவில் நடந்த CAA-NRC எதிர்ப்பு பேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் எழுப்பிய பெண்ணுக்கு ஓவைசி கண்டனம்.
பெங்களூரு:-
குடியுரிமை திருத்த சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)-யை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் எதிர்கட்சிகள் எதிர்ப்பு பேரணிகளும், போராட்டங்களும் நடந்தி வருகின்றன.
இந்நிலையில், பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நேற்று நடைபெற்றது.
இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹதுல் முஸ்லிமீன் (All India Majlis-e-Ittehadul Muslimeen) கட்சியின் தலைவர் அஸாரூதீன் ஓவைசி கலந்து கொண்டார்.
பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா லியோனா என்ற இளம்பெண் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் எழுப்பினார்.
அவரை தடுத்து நிறுத்திய ஓவைசி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேலும், அந்த பெண்ணிற்க்கும் எனக்கோ எங்கள் கட்சிக்கோ எந்த தொடர்பும் கிடையாது. ஒருங்கிணைப்பாளர்கள் அப்பெண்ணை அழைத்திருக்க கூடாது.
இவ்வாறு நடக்கும் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருக்க மாட்டேன். நாங்கள் இந்தியாவிற்கு தான் இருப்போம் ஒருபோதும் பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து அந்த இளம்பெண் மீது 124ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்பின் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார்.