தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தெலுங்கானா:
தெலுங்கானாவில் பசுமைப் பட்டாசுகளை விற்பதற்கும், வெடிப்பதற்கும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகள் விற்கவும்,வெடிக்கவும் தெலுங்கானா உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாநிலத்தில் பட்டாசுகள் வெடிக்க முழு தடையை அரசு விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக, தெலுங்கானா பட்டாசு டீலர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் எனவும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தெலங்கானாவில், பசுமை பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் ,விதிகளின்படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கும் அனுமதியினை வழங்கியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.