டெல்லி:
டெல்லியில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 5:02 மணிக்கு, டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.டெல்லியின் நாங்லோய் பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து கட்டடங்களில் இருந்து வீதிகளுக்கு வந்தனர்.இதனால் டெல்லியில் அதிகாலை சற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவானது. இது கடந்த ஒரு வாரத்தில் டில்லியில் நிகழ்ந்த இரண்டாவது நிலநடுக்கம் ஆகும்.
முன்னதாக கடந்த டிசம்பர்-17-ம் தேதி டெல்லி NCR-ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அதேபோல், பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில் இன்று அதிகாலை 5:13 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ இதுவரை எதுவும் பதிவாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.