இந்தியா

ஷூவுக்குள் இருந்து வெளிவரும் உஷ் உஷ்… அதிரும் மக்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளாவில் கண்ணூர் மாவட்டம் மாலூர் கிராமத்தில் வசிக்கும் ஜசீரா என்பவரின் ஷூவில், பாம்பு இருந்துள்ளது. ஷூவிலிருந்து சாக்ஸை எடுத்ததும் உள்ளே இருந்து ஏதோவொன்று அவரது கையைக் கடிக்க சட்டென்று வெளியே வந்துள்ளது.

அதிர்ச்சியில் பயமடைந்து கூச்சலிட்டபடி ஷூவைத் தூக்கி வீசியுள்ளார் ஜசீரா. அவரின் சத்தம் கேட்டு வீட்டினர் அங்கு வந்து பார்த்தபோது, ஷூவுக்குள் இருந்து பாம்பு வெளியே வந்திருக்கிறது.ஷூவின் உள்ளே இருந்த பாம்பு, வித்தியாசமாக இருந்தால் வனத்துறைக்கு இதுபற்றி தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் அந்தப் பாம்பு ’சட்டித்தலையன்’ என்பதும் அதிக விஷத்தன்மை கொண்டது என தெரிவித்து பாம்பை லாவமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

ALSO READ  மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு

சட்டித்தலையன் வகை பாம்பு, ஒரேநேரத்தில் பலமுறை கடித்து விஷத்தைச் செலுத்தும் என்பதும் தெரியவந்ததால், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் சில நாட்கள் முன் கேரளாவில், ஹெல்மெட்டுக்குள் விஷப்பாம்புடன் ஆசிரியர் ஒருவர் 11 கி.மீ தூரம் பயணித்து உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனவே அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஷூ, செருப்பு ஆகியவற்றின் உள்ளே எறும்பு, பல்லி, பூரான் உள்ளிட்ட பூச்சிகள் இருக்கக்கூடும் என்பதால், தினமும் காலணிகளை அணியும் முன் அவற்றைச் சோ


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: பிரதீப் சிங் முதல் இடம்… 

naveen santhakumar

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்:

naveen santhakumar

சாத்தான்குளம் சிறை மரணம்: ஹர்பஜன் சிங் கண்டனம்… 

naveen santhakumar