கேரளாவில் கண்ணூர் மாவட்டம் மாலூர் கிராமத்தில் வசிக்கும் ஜசீரா என்பவரின் ஷூவில், பாம்பு இருந்துள்ளது. ஷூவிலிருந்து சாக்ஸை எடுத்ததும் உள்ளே இருந்து ஏதோவொன்று அவரது கையைக் கடிக்க சட்டென்று வெளியே வந்துள்ளது.
அதிர்ச்சியில் பயமடைந்து கூச்சலிட்டபடி ஷூவைத் தூக்கி வீசியுள்ளார் ஜசீரா. அவரின் சத்தம் கேட்டு வீட்டினர் அங்கு வந்து பார்த்தபோது, ஷூவுக்குள் இருந்து பாம்பு வெளியே வந்திருக்கிறது.ஷூவின் உள்ளே இருந்த பாம்பு, வித்தியாசமாக இருந்தால் வனத்துறைக்கு இதுபற்றி தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் அந்தப் பாம்பு ’சட்டித்தலையன்’ என்பதும் அதிக விஷத்தன்மை கொண்டது என தெரிவித்து பாம்பை லாவமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
சட்டித்தலையன் வகை பாம்பு, ஒரேநேரத்தில் பலமுறை கடித்து விஷத்தைச் செலுத்தும் என்பதும் தெரியவந்ததால், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் சில நாட்கள் முன் கேரளாவில், ஹெல்மெட்டுக்குள் விஷப்பாம்புடன் ஆசிரியர் ஒருவர் 11 கி.மீ தூரம் பயணித்து உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஷூ, செருப்பு ஆகியவற்றின் உள்ளே எறும்பு, பல்லி, பூரான் உள்ளிட்ட பூச்சிகள் இருக்கக்கூடும் என்பதால், தினமும் காலணிகளை அணியும் முன் அவற்றைச் சோ