பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்தயாலு ரயில் நிலையம் அருகே உள்ள குடிசைப்பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயமடைந்தனர். தீக்காயங்களுக்கு உள்ளான 7 பேர் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்,” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.