இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி 2 லட்சத்து 38 ஆயிரத்து 18 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 36 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 310 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் பரவல் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதுவரை 27 மாநிலங்களில் 8 ஆயிரத்து 891 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய ஒமைக்ரான் தொற்றுடன் ஒப்பிடுகையில் இது 8.31 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.