பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று முன்தினம் 71 வது பிறந்த நாள் . அன்று மட்டும் நாடு முழுதும் 2.50 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.
என் பிறந்த நாளை மறக்க முடியாததாகவும் , மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் மாற்றியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் . இந்நிலையில் , கோவாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது .
தடுப்பூசி வழங்கும் பணியில் பணியாற்றியோர் மற்றும் பயனாளிகள் சிலருடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார் .
அப்போது அவர் கூறியதாவது : என் மனதின் குரலை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் எத்தனையோ பிறந்த நாள்கள் வந்துள்ளன . வழக்கமாக , பிறந்த நாள் கொண்டாட்டங்களில் எனக்கு விருப்பமில்லை.
என் வாழ்நாளில் இந்த பிறந்த நாள் மறக்க முடியாத , உணர்வுப்பூர்வமானதாக அமைந்துவிட்டது . நாடு முழுதும் ஒரே நாளில் 2.50 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது . இந்த புதிய சாதனையை படைத்த அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.
தடுப்பூசி போட்டால் சிலருக்கு , பக்க விளைவாக காய்ச்சல் வருவதாக கூறுகின்றனர் . தடுப்பூசியில் நம் நாடு புதிய சாதனை படைத்துள்ளது .