இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் சிவனின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.அதன்படி 2022 ஜனவரி மாதம் 14-ம் தேதி வரை இவர் பதவியில் நீட்டிப்பார்.
2018-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்ட இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரின் பதவிக்காலம் 2021 ஜனவரி 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது.இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு. அதன்படி அவரின் பதிவிக்காலம் 2022 ஜனவரி 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1982-ம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானியாக இணைந்த சிவன், இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து, பின்னர், பிஎஸ்எல்வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றியவர்.33 ஆண்டுகளாக செயற்கைக் கோள்களை ஏவும் பணிகளில் சிவனின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.