காத்மாண்ட்:-
இந்தியாவின் சில பகுதிகளை தங்கள் நாட்டை சேர்ந்தது என்று கூறிய நேபாள பிரதமர் கே.பி.ஒலி தற்பொழுது பகவான் ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்:-
ராமர் வசித்த அயோத்தி என்பது இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் அல்ல என்றும், நேபாளத்தின் மேற்கு பிர்குஞ்ச் (West Birgunj) மாவட்டத்தின் தோரி (Thori) அருகேயுள்ள அயோத்தி என்ற சிறு கிராமம் என்றும் தெரிவித்துள்ளார். வால்மீகியின் ஆசிரமம் (Valmiki Ashram) நேபாளத்தில் உள்ளது என்றும், இந்தப் புனித இடத்தில்தான் அரசர் தசரதர் தனக்கு மகன் வேண்டி யாகம் நடத்தினார் என்றும் கூறினார்.
மேலும், போலியான அயோத்தியாவை (Ayodhya) உருவாக்கி இந்திய அத்துமீறி கலாச்சார ஆக்கிரமிப்பில் (Cultural Encroachment) ஈடுபட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நேபாளம், லிபுலேக் கணவாய் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சர்மா ஒலி பேசியுள்ளார்.
கே.பி.ஒலி தங்கள் நாட்டைச் சேர்ந்தது என்று கூறும் இந்தியாவின் சில பகுதிகள் கூட நேபாள அரசர்களோடு போட்ட ஒப்பந்தத்தின்படி இந்தியாவுடன் இணைக்கப்பட்டவை ஆகும். ஆனால் அதே சமயம் கடவுள் ராமரை தங்கள் நாட்டவர் என்று கூறுவதை கேட்டு நேபாளிகளே சிரித்து விடுவார்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள்.