முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் ஜியோபுக் எனப்படும் பட்ஜெட் விலையிலான லேப்டாப்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டதை தொடர்ந்து “ஜியோபுக்” என்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோபுக் எனப்படும் பட்ஜெட் விலையிலான இந்த லேப்டாப்களில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த லேப்டாப்கள் 4ஜி வசதியுடன் இருக்கும் என்றும், இதன் விலை இந்திய விலையில் ரூ.15,000 ரூபாய் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபுக்கிற்காக உலகளாவிய நிறுவனங்களான குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து ஜியோபுக் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதற்கட்டமாக பள்ளி மாணவர்கள் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.